இந்திய இழுவைப்படகுகளை தடுக்க வேண்டும்: முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை
எங்கள் கடற்பரப்பிற்குள் இந்திய இழுவைப்படகினை முற்றாக தடுக்கவேண்டும் என இந்திய இழுவைப்படகுகளால் வாழ்வாதாரத்தை இழந்த கடற்றொழிலாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போருக்கு முன்னரான 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கடலில் மீன்கள் அதிகமாக இருந்தது. அப்போது எந்த கஷ்டமும் எங்களுக்கு இல்லை.
மீன் விலையும் குறைவாகவும் இருந்தது. 70 ரூபா 80 ரூபாவுக்கு இருந்த மீனை இப்போது 700 ரூபாவிற்கு விற்றுகூட எங்களால் வாழமுடியாத நிலையே உள்ளது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இந்திய இழுவைப்படகுகளினால் எமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய இழுவைப்படகுகள் வராமால் தடுத்தால்தான் இலங்கை கடற்றொழிலாளர்கள் நிம்மதியாக கடற்றொழில் செய்து வாழமுடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
