சர்வதேச போட்டிகளில் நேர கட்டுப்பாடு: புதிய விதியை அறிமுகப்படுத்தும் ஐசிசி
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நேர விரயத்தை தடுக்க புதிய முறையை அறிமுகப்படுத்த சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
அதற்கேற்ப போட்டியின் வேகத்தை ஒழுங்குபடுத்த சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுக்க உள்ளது.
இதன்படி இரண்டு ஓவர்களுக்கிடையேயான நேரம் அதற்கேற்ப ஒழுங்குபடுத்தப்படுகிறது.
5 ஓட்டங்கள் அபராதம்
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் கூற்றுப்படி, இந்த முறை 2023 டிசம்பர் மற்றும் 2024 ஏப்ரலுக்கு இடையில் இந்த நடைமுறைதொடர்பில் பரிசோதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஐசிசி விதியின்படி, முந்தைய ஓவரை முடித்த ஒரு நிமிடத்திற்குள் கலத்தடுப்பு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக இல்லை என்றால், ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறையாக 5 ஓட்டங்கள் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
