மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மதுபான போத்தல் ஸ்டிக்கர் நடைமுறையை மீறும் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுபான போத்தல்களில் பொறிக்கப்படும் ஸ்டிக்கர்கள் தொடர்பிலான விதி மீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள், நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய காலத்தில் ஸ்டிக்கர் முறைமை அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், உரியமுறையில் அமுல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலால் வரி
மதுபானம் குறித்த ஆய்வுகூடம் ஒன்றை நிறுவுதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பினை வலுப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இது குறித்த முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது முழுமையாக வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் கலால் வரியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
