டிரான் அலஸுக்கான பாதுகாப்பு குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Tiran Alles Government Of Sri Lanka Ministry of Defense Sri Lanka
By Sajithra Feb 18, 2025 09:34 AM GMT
Report

முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் (Tiran Alles) உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக எச்சரிக்கும் உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள் காட்டி, இலங்கை அரசாங்கம் அவருக்கு சிறப்புப் பணிக்குழு (STF) பாதுகாப்பை தொடர்ந்து வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

"கடந்த 11ஆம் திகதி அன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பிற முன்னாள் அதிகாரிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. 

இருப்பினும், டிரான் அலஸுக்கு ஏன் இன்னும் எஸ்.டி.எஃப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது” என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் ஒரு பத்திரிகையாளரால் வினவப்பட்டது. 

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உயிருக்கு அச்சுறுத்தல் 

இதனை தொடர்ந்து, ​​இந்த விவகாரம் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டது. மேலும், பாதுகாப்பு ஒதுக்கீடுகள் புலனாய்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்தவை என்று அமைச்சர் ஜெயதிஸ்ஸ பதிலளித்துள்ளார். 

டிரான் அலஸுக்கான பாதுகாப்பு குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Stf Security Of Ex Minister Tiran Alles

இந்நிலையில், டிரான் அலஸைப் பாதுகாக்க ஆரம்பத்தில் 19 அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாக ஒரு மூத்த எஸ்.டி.எஃப் அதிகாரி உறுதிப்படுத்தியதாக இன்று பிபிசி செய்தித்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இதற்கமைய, டிரான் அலஸின் நெருக்கமான பாதுகாப்புப் பணியாளர்களாக ஏழு அதிகாரிகளும் மேலும் 12 பேர் அவரது வீடு மற்றும் பிற இடங்களில் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில், பாதாள உலகக் குழுக்களிடமிருந்து வந்த அச்சுறுத்தல்கள் காரணமாக, டிரான் அலஸ் முதன்முதலில் எஸ்.டி.எஃப் பாதுகாப்பைப் பெற்றார்.

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

 சிறப்புப் படை வீரர்கள்

இந்நிலையில், புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து தனக்கு ஒதுக்கப்பட்ட எஸ்.டி.எஃப் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக பிபிசி சிங்கள சேவையில் உரையாற்றிய போது அவர் கூறியுள்ளார். 

டிரான் அலஸுக்கான பாதுகாப்பு குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Stf Security Of Ex Minister Tiran Alles

இதன்போது, "எனது பாதுகாப்பிற்காக இப்போது ஆறு சிறப்புப் படை வீரர்கள் மாத்திரமே உள்ளனர். உளவுத்துறை அறிக்கைகள் எனக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக எச்சரித்தது மட்டுமல்லாமல், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆபத்துகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டின" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த பாதுகாப்பு தேவை குறித்து தீர்மானிப்பதற்கான ஒதுக்கீடுகள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

மேலும், "நாங்கள் அவ்வப்போது மதிப்பீடுகளை நடத்தி சரி செய்தல்களைச் செய்கிறோம். பாதுகாப்பு இனி தேவையில்லை என்றால், அது அகற்றப்படும்" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பளை பகுதியிலுள்ள வீடொன்றில் பெற்றோல் குண்டு தாக்குதல்

பளை பகுதியிலுள்ள வீடொன்றில் பெற்றோல் குண்டு தாக்குதல்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US