அதிரடியாக வெளியேற்றப்பட்ட அதிரடி படையினர்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இதுவரை காலமும் பணியாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் இன்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதிரடி படையினருக்கு பதிலாக ரக்னா லங்கா தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் தீயணைப்பு மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை மீளப்பெறுவதாக சில மாதங்களுக்கு முன்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
அதிரடிப்படை வீரர்கள்
இதுவரை 200 பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் களனிகம, சீதுவ, குருந்துகஹ ஹதெக்ம, பின்னதுவ மற்றும் சூரியவெவ ஆகிய முழு நெடுஞ்சாலைப் பிரிவில் உள்ள ஐந்து முகாம்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam