அரிசியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - பந்துல குணவர்தன
அரிசியின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சந்தையில் அரிசியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் எதிர்வரும் வாரம் முதல் அரிசி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மூன்றாண்டு காலப் பகுதிக்கு ஒரு கிலோ அரிசியை நூறு ரூபாவிலும் குறைவாக பெற்றுக் கொள்ளக்கூடிய வழிகள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரிசி விலை குறைப்பு குறித்த யோசனைத் திட்டம் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரிசிக்கான அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து வர்த்தமானியில் அது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்க்கப்பட்ட ஈரான் மீதான அழித்தொழிப்பு தாக்குதல் 4 மணி நேரம் முன்
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam