நாட்டில் இன்று பதிவாகிய கோவிட் மரணங்களின் நிலவரம்
நாட்டில் நேற்று கோவிட் தொற்று காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்ட அறிக்கையின் மூலமாகவே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மரணித்தவர்களில் 13 ஆண்களும், 07 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரழந்தவர்களில் 16 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் இன்று இதுவரையில் 519 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையின் படி நாட்டில் இதுவரையில் 561,059 ஆக இருந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 561,578 ஆக உயர்வடைந்துள்ளது.