முல்லைத்தீவு பாடசாலையொன்றில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை
முல்லைத்தீவு பாடசாலை ஒன்றின் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் கடந்த16ஆம் திகதி காலை புலம்பெயர் தமிழர் ஒருவரின் தன்னார்வ முயற்சியினால் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
மாணவர்களிடம் கையளிப்பது
தெரிவு செய்யப்பட்ட ஏழு திருக்குறள்களை கொண்ட கல்வெட்டும் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட தூபியில் அமைக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் இது போன்ற சிலைகளை நிறுவி மாணவர்களிடம் கையளிப்பது மாணவர்களின் ஆரோக்கியமான மனநிலை மாறாறங்களுக்கு பாரியளவில் உதவியாக அமையும் என கல்விசார் சமூகத்தினர் பாராட்டியுள்ளனர்.
பாடசாலைகளில் சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதனோடு திருவள்ளுவர் சிலையும் அமைக்கப்பட்டது மு/குமுழமுனை மகாவித்தியாலய மாணவர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாகும் என்பதும் நோக்கத்தக்கது.