வெள்ளவத்தை பகுதியில் கத்தி குத்து: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு- வெள்ளவத்தை பகுதியில் கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் வெள்ளவத்தை - மெனிக் பிலேஸ் 59ஆவது ஒழுங்கில் இன்றைய தினம் (05.06.2023) இடம்பெற்றுள்ளது.
வர்த்தகர் ஒருவருக்கும் மற்றுமொரு நபருக்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தினையடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார்
இதில் காயமடைந்த 63 வயதான வர்த்தகர் களுபோவில போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்தியால் குத்திய சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |