கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 191ஆவது வருடாந்த திருவிழா - LIVE
கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 191ஆவது வருட வருடாந்த திருவிழா இன்றையதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இன்றையதினம் திருவிழா தினத்திற்கான சிறப்பு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படுகின்றன.
இன்று காலை 4 மணி முதல் திருப்பலிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் 12 மணிவரை அடுத்தடுத்து திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இருந்து வருகைத் தந்த பெருமளவான பக்தர்களோடு இன்று மாலை புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனியும் இடம்பெறவுள்ளது.
புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் இன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து, நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் திருவிழா நிறைவுபெறும்.





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
