ஸ்டாலின், சீமான், கமல் ஆகியோருக்கு நாடாளுமன்றில் சிறீதரன் வாழ்த்து
தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெற்றிருந்தது.
அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக எட்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலச் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியாகியிருந்தன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதுடன், முதல்வராக மு.க.ஸ்டாலின் மே 7ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்கால இருப்பிற்கான வழிகளில் பங்கு கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், சட்டசபை தேர்தலில் சீமான், கமலஹாசன் ஆகியோர் தோல்வியை சந்தித்திருந்தாலும் வெற்றியின் விளிம்பு வரை சென்றிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam