கனடாவில் தனிமையில் வாடிய இலங்கையர்: உதவியால் நேர்ந்த விபரீதம்

Sri Lanka Canada
By Dhayani Mar 11, 2024 09:52 PM GMT
Dhayani

Dhayani

in கனடா
Report

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன் என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தில் தனுஷ்க விக்கிரமசிங்க என்பவரின் மனைவியான தர்ஷனி பன்பரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகநாயக (35) தம்பதியரின் பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2) ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

அதிரடியாக வெளியேற்றப்பட்ட அதிரடி படையினர்

அதிரடியாக வெளியேற்றப்பட்ட அதிரடி படையினர்

கனடாவில் தனிமையில் வாடிய இலங்கையர்: உதவியால் நேர்ந்த விபரீதம் | Srilankas Death In Canada

உதவியால் நேர்ந்த விபரீதம்

தனுஷ்க விக்கிரமசிங்க இலங்கையிலிருந்து கனடாவுக்கு சென்று பல ஆண்டுகள் தனிமையாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த கோடையில் அவரது குடும்பத்தினரும் கனடா சென்றுள்ளனர்.

இந்நிலையில்,சில மாதங்களுக்கு முன்னர் மகள் கெல்லி விக்கிரமசிங்க பிறந்த மகிழ்ச்சியில் குடும்பத்தினர் இருந்துள்ளனர்.

இதன்போது கனடாவில் கல்வி கற்க வந்த இலங்கையரான ஃபெப்ரியோ டி ஸோய்சா (19) என்பவர் தனக்கு தங்க இடம் இல்லை என்று கூறியமையினால், தனுஷ்க விக்கிரமசிங்க அவரை தன் வீட்டு அடித்தளத்தில் தங்கவைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 11.00 மணியளவில் பணி முடித்து தனுஷ்க வீடு திரும்பும்போது வீடு அமைதியாக இருந்துள்ளது.

இதன்போது வீட்டுக்குள் நுழைந்த தனுஷ்கவை மார்பிலும் முதுகிலும் கத்தியால் டி ஸோய்சா குத்தியுள்ளார்.

கனடாவில் தனிமையில் வாடிய இலங்கையர்: உதவியால் நேர்ந்த விபரீதம் | Srilankas Death In Canada

சந்தேகநபர் கைது

இதன்போது காரணம் புரியாமல் திகைத்த தனுஷ்க, டி ஸோய்சாவைத் தடுக்க முயன்றதில் அவரது விரல்கள் கடுமையாக சேதமடைந்ததுடன், அவரது முகத்திலும் வெட்டுகாயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது மனைவி, பிள்ளைகளுக்கு ஏதாவது ஆபத்தா என தனுஷ்க கேட்டபோது, இல்லை என சந்தேகநபர் பொய் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சற்று நேரத்தில் பொலிஸார் டி ஸோய்சாவைக் கைது செய்துள்ளதுடன், தனுஷ்க, மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் வீட்டில் தங்கியிருந்த அமரகூன்முபியயான்சேல ஜீ காமினி அமரகோன் (40) ஆகியோர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனுஷ்க, இன்னமும் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட அறுவர்: உறவினர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட அறுவர்: உறவினர்கள் தொடர்பில் வெளியான தகவல்

காலியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி! மூவர் வைத்தியசாலையில்

காலியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி! மூவர் வைத்தியசாலையில்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US