சுவிற்சலாந்தில் இலங்கையரை குறிவைத்து பெரும் மோசடி! அம்பலமாகும் உண்மைகள் (Video)
சுவிற்சலாந்தின் ஜெனிவாவில் இருக்கும் கும்பலொன்று சுற்றுலா சேவை நிறுவனம் ஒன்றை நடத்தி உண்டியல் முறையில் பெருந்தொகை பணத்தினை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளமை தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் சங்கர் எனும் பெயரில் பாரிஸ் நகரத்தில் அழகு கலை நிலையத்தில் உண்டியல் முறை மூலம் 3000 யூரோக்களை கொடுத்து இலங்கைக்கு பணம் அனுப்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்த பணம் அழகு கலை நிலைய உரிமையாளரினால் செங்கலடியில் உள்ள ஒருவருக்கு அனுப்பப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் சங்கர் எனும் பெயரில் பலருடன் நட்புடன் பழகி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த குழு இலங்கையிலிருந்து ஐரோப்பாவிற்கு நாடுகடத்துவதாக கூறி மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரொருவர் கூறுகையில்,