கட்டார் மற்றும் குவைத் சென்ற ஸ்ரீங்கன் விமானங்களுக்கு சிக்கல்
கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் கொழும்புக்கு மீண்டும் திரும்பியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ மோதல்கள் காரணமாக இவ்வாறு விமான பயணங்கள் சென்று மீண்டும் பயணங்களை ஆரம்பித்துள்ளன.
விமானங்கள் ஓமானில் தரையிறங்கி, நாடு திரும்புவதற்கு முன்பு எரிபொருள் நிரப்பப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நிலைமை
விமானத்தில் இருந்த வெளிநாட்டு பயணிகள் ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இலங்கை பயணிகளை அவர்களின் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய பாதுகாப்பு நிலைமையை மதிப்பாய்வு செய்த பிறகு விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான நேரம் முடிவு செய்யப்படும்.
இதேவேளை, டுபாய், அபுதாபி மற்றும் ரியாத் ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் சிறிய தாமதங்களின் பின்னர் அந்த நாடுகளில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.