குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட சட்டத்தரணி! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
2023 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு பதிவேட்டிலிருந்து இரண்டு பக்கங்களைக் கிழித்தமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி தர்மசிறி கருணாரத்ன குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, வஞ்சகம் மற்றும் முறைகேடு செய்ததற்காக உயர் நீதிமன்றம் இன்று அவரை சட்டத்தரணிகள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிட்டது.
குற்றவாளி
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோருடன் இணைந்து தீர்ப்பை வழங்கினார்.

சட்டத்தரணி தர்மசிறி கருணாரத்னவின் நடவடிக்கைகள் சட்டத் தொழிலின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக பிரதம நீதியரசர் தமது தீர்ப்பில் கூறினார்.
அத்துடன், குறித்த வழக்கு பதிவேட்டை பார்வையிட அவர் ஒரு தவறான பெயரையும் வழங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், சட்டத்தரணிகள் பட்டியலில் இருந்து அவரை உடனடியாக நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri