அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞர் சடலமாக மீட்பு! பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
அவுஸ்திரேலியாவின் ஹோபர்ட் கரையோரப் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
18-25 க்கு இடைப்பட்ட வயதுடைய குறித்த இளைஞர், இலங்கை பின்னணியை கொண்டவர் எனவும் நம்பப்படுகின்றது.
இதனையடுத்து அவரை அடையாளம் காணும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
இந்த மரணத்துக்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருப்பு ஜீன்ஸ், பச்சை நிற t-shirt மற்றும் கருப்பு puffer jacket ஆகியவற்றை இவர் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இளைஞர் வேறொரு இடத்தில் தண்ணீரில் விழுந்திருக்கலாம் எனவும், அவரது உடல் பின்னர் Tranmere Point பகுதியை வந்தடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
குறித்த இளைஞர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 131 444 என்ற எண்ணில் ESCAD 168-21052023 என்ற குறிப்பு எண்ணுடன் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
திடீரென பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா? Cineulagam
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri