ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி: பல இலட்சம் ரூபாவை இழந்த மக்கள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையதளங்கள் ஊடாகப் பொதுமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்துக் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் விடயங்களைச் சமர்ப்பித்தனர்.
பாரிய நிதி மோசடி
பாதிக்கப்பட்ட இருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, பமுணுகம பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 55 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 3.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் இவ்வாறான போலி இணையதளம் மூலம் திருடப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான், இந்தத் திட்டமிட்ட குற்றச்செயல் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலாக தகவல்களை உடனுக்குடன் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam