சந்தேகத்துக்குரியவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமை அல்ல - நீதி அமைச்சர்
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியபடி உயிர்த்த ஞாயிறு படுகொலையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு ஜனாதிபதி விசாரணை ஆணையகத்தினால் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வாய்ப்பில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.
சந்தேகத்துக்குரியவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமை அல்லது பொறுப்பு அல்ல, அது சட்டமா அதிபரின் பொறுப்பு என்று சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை இலங்கை காவல்துறை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுறுத்தி விசாரணைகளின் கோப்புகளை சட்டமா அதிபர் துறையிடம் ஒப்படைத்துள்ளது.
காவல்துறையினர் சேகரித்த ஆதாரங்களை மதிப்பிட்ட உடனேயே, எந்தவொரு சந்தேகத்துக்குரியருக்கு எதிராக குற்றச்சாட்டு வலுவாக இருப்பதாக சட்டமா அதிபர் நினைத்தால் அவர் மற்றும் அவள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தப்பட முடியும்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ
சட்டமா துறையின் 10 மூத்த ஆலோசகர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,
குற்றத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படுவதைக் காண அரசாங்கமும், ஆர்வமாக உள்ளதாகவும் அமைச்சர் சப்ரி
கூறியுள்ளார்.