பேருந்து சேவைகள் குறித்து வெளியான தகவல்
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தனியார் பேருந்து சேவைகள் வழமைப்போன்று இடம்பெறுகின்றன.
அரசாங்கத்தின் வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து பல்வேறு தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரச அலுவலகங்களில் தடங்கள்
எனினும் கொழும்பின் பெரும்பாலான வீதிகளில் வழமை போன்று தனியார் பேரூந்து சேவைகள் இடம்பெறும் அதேவேளை தூரப் பிரதேசங்களுக்கான தனியார் பேரூந்து போக்குவரத்தும் தடங்கல் இன்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதற்கிடையே கொழும்பிலுள்ள ஏராளமான அரச அலுவலகங்களின் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.