உலக கிரிக்கெட் அரங்கில் 2025 ஆம் ஆண்டின் முதல் சதத்தை பெற்ற இலங்கை வீரர்
உலக கிரிக்கெட் அரங்கில் 2025 ஆம் ஆண்டின் முதல் சதத்தை இலங்கையின் வீரர் ஒருவர் பெற்றுள்ளார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது 20இற்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் குசல் பெரேரா இந்த சதத்தை பெற்றுள்ளார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது 20இற்கு 20 போட்டி இன்று செக்சன் ஓவலில் நடைபெற்று வருகிறது.
குசல் பெரேரா பெற்றுக்கொண்ட ஓட்டங்கள்
இந்தநிலையில் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தமது 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில், குசல் பெரேரா 46 பந்துகளை எதிர்கொண்டு 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இதுவே 2025ஆம் ஆண்டு உலக கிரிக்கெட்டில் பெறப்பட்ட முதல் சதமாக கருதப்படுகிறது.
சரித் அகலங்க 46 ஓட்டங்களை பெற்றார். இந்தநிலையில் நியூஸிலாந்து அணி 219 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட 20இற்கு 20 தொடரில் ஏற்கனவே நியூஸிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam