முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கிய விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.கா ஸ்டாலினுக்கு விடுதலை புலிகளின் இயக்கத்திலிருந்து வெளியேறிய ஈழ தமிழ் இளைஞர்கள் பாதுகாப்பு வழங்கியதாக அரசியல் விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜெயலலித்தா அதிகாரத்திற்கு வருகை
மேலும் கூறுகையில், 1993 ஆம் ஆண்டு ஜெயலலித்தா அதிகாரத்திற்கு வருகை தந்த பின்னர் அரசியலில் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய மனநிலையில் அவர் இருந்தார்.

அந்தநேரத்தில் ஸ்டாலினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவருடைய தந்தைக்கு இருந்தது.
1993 ஆம் ஆண்டு மதுரை சற்று கிடுகிடுத்து போனது.ஏனென்றால் கலைஞர் வீட்டு பெண்கள் வெள்ளை சீலை கட்ட போகிறார்கள் என பொன்முத்து தலைமையில் வைக்கோவின் படைத்தளபதிகள் கூறினார்கள்.
அச்சுறுத்தல்
இதன்போது அழகிரிக்கு எதாவது அச்சுறுத்தல் நேரும் என்று கருதிய கருணாநிதி, பி.டி.ஆர் ஐ தொலைபேசியில் அழைத்து அழகிரியை மூன்று மாதங்களுக்கு வெளியில் விட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு காரணம் அப்போது இருந்த அ.தி.மு.க. ஆட்சியே ஆகும்.
இவ்வாறு அழகிரி பி.டி.ஆர் இன் கட்டுப்பாட்டில் இருந்தபோதே ஸ்டாலினுக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பாதுகாப்பு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
You My Like This Video
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam