இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கும் சீனா!
இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் கோவிட் தடுப்பூசிகளை, சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளது.
சினோவக் என்னும் தடுப்பூசி வகையின் ஒரு மில்லியன் மாத்திரைகளை இலங்கைக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தடுப்பூசி ஏற்றுகை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு உதவும் நோக்கில் இவ்வாறு நன்கொடை அளிப்பதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. சீனத் தூதரகத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியாக சினோவக் காணப்படுகின்றது எனவும், 1.8 பில்லியன் தடுப்பூசிகள் இதுவரையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 1.4 பில்லியன் தடுப்பூசிகள் 50 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்றப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
China decides to donate one million doses of Sinovac COVID-19 vaccine to Sri Lanka for further expansion of its vaccination drive.#Sinovac is world's most used vaccine, with 1.8 billion doses supplied & 1.4 bln jabbed in 50 countries by the end of August.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) September 16, 2021
???#TogetherWeCan pic.twitter.com/k11crk6xls