விரைவில் கோட்டாபயவின் கைகளுக்குச் செல்லவுள்ள புதிய அரசமைப்புக்கான வரைவு நகல்!
புதிய அரசமைப்புக்கான வரைவு நகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விரைவில் கையளிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாவது, புதிய அரசமைப்பை இயற்றும் பணி தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவானது, புதிய அரசமைப்புக்கான வரைவு நகலை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.
அதன்பின்னர் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய புதிய அரசமைப்பை இயற்றுவதற்கான வாய்ப்பு எமக்கு உருவாகும். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றும் உள்ளது. சகல தரப்பினரினதும் கருத்துகளை உள்வாங்கிய பின்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரச தலைமை
முடிவெடுக்கும் என்றார்.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
