இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாம்! வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை (VIDEO)
அரச பயங்கரவாதம் செயற்படும் நாடான இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த அரச பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை ஒரு ரூபா கூட இந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.நாங்கள் பசியால் சாகத் தயாராக இருந்தாலும் ஐந்து காசு கூட அனுப்ப வேண்டாம். இந்த அரசுக்கு உதவாதீர்கள். IMF இல் என்ன கிடைக்கிறதோ அதுவே கிடைக்கும்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது செய்திகளின் தொகுப்பு காணொளி,





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 18 மணி நேரம் முன்

496 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த உலகின் அதிவேக கார்! ஜேர்மனியில் பறந்த காட்சிகள் வைரல் News Lankasri

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri
