இலங்கையில் நிகழப்போகும் மிகப் பெரிய ஆட்சி மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்-செய்திகளின் தொகுப்பு
2025 ஆம் ஆண்டு நாட்டில் மிகப் பெரிய ஆட்சி மாற்றம் இடம்பெறும் என பிரபல ஜோதிடர் பி.ஜீ.பீ.கருணாரத்ன கருத்து வெளியிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“2025 ஆம் ஆண்டுக்கு முன் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்க முயற்சித்தால், பாரிய இரத்தக் களரி ஏற்படும்.
ரணில் விக்ரமசிங்கவின் கிரகப்பலன் மிக வலுவாக இருப்பதால், 2025 ஆம் ஆண்டு வரை அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது.
2025 ஆம் ஆண்டு நாட்டில் மிகப் பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதுடன், மக்கள் மத்தியிலும் பாரிய மாற்றங்கள் ஏற்படும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கிரகப் பலன்கள் பலமாக இருக்கின்றன.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவதை தடுத்து நிறுத்த முடியாது என்று இதற்கு முன்னர் நான் கூறியிருந்தேன்.
இலங்கை பொதுஜன பெரமுனவின் அரசியலை பொதுமக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். அவர்களால், ஆட்சிக்கு வர முடியாது.”என கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri