கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் - ஜனாதிபதிக்கு விசுவாசமானவர்களுக்கு பலம் வாய்ந்த அமைச்சு பதவிகள்
எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் ஜனாதிபதிக்கு விசுவாசமான உறுப்பினர்களுக்கு பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கான பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதியின் தீர்மானம்
இருப்பினும் அவர்களில் பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீண்ட நாட்களாக அமைச்சுப் பதவிகளுக்காகக் காத்திருந்த பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர், அமைச்சுப் பதவி கிடைக்காவிடின், தமக்கு வழங்கப்படுகின்ற ஆதரவு தொடர்பில் தீர்மானம் எடுக்க நேரிடும் என கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 14 மணி நேரம் முன்

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri
