அநுரவின் முடிவுகளால் பலருக்கும் காத்திருந்த ஏமாற்றம்
அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முடிவுகளால் தற்போது பலருக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பிடிவாத தன்மையுடன் செயற்படும் தற்போதைய அரசாங்கம் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை சரியான பதவிகளில் நியமிக்க தவறியுள்ளமையினால் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, ஜேவிபியினருக்கு மாத்திரம் முக்கிய பதவிகளை அநுரகுமார வழங்கி வரும் நிலையில் கடந்த அரசாங்கத்திற்கும் புதிய அரசாங்கத்திற்கும் எவ்வித மாற்றமும் இல்லை என மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் வழங்கிய வாக்குறுதிகளை புதிய அரசாங்கம் செய்ய தவறும் பட்சத்தில் எதிர்கால அரசியல் பெரும் கேள்விக்குள்ளாகும் என்றும் பேசப்படுகின்றது.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam