கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்! சதுப்பு நிலத்தில் உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு
பமுனுகம, நில்சிரிகம பிரதேசத்தில் சதுப்பு நிலத்திலிருந்து குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் குறித்த நபர் காணாமல்போயிருந்த நிலையில் அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டிற்கமைய விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்களை நில்சிரிகம சதுப்பு நிலத்திலிருந்து மீட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
காணாமல்போன நபருடன் கடைசியாக தொடர்பில் இருந்த ஒருவரை அடையாளம் கண்ட பொலிஸார், அவரை பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த நபரை கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நில்சிரிகம சதுப்பு நிலத்தில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 42 வயதுடைய சந்தேகநபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |