இந்தியாவின் பாதுகாப்பில் இலங்கை கரிசனை கொண்டுள்ளது: அமைச்சர் அலி சப்ரி
இந்தியாவின் பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் இடம் தரப்படமாட்டாது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பின் கரிசனையை இலங்கை புரிந்து கொண்டுள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆட்சேபிக்கவில்லை
அதேநேரம் இலங்கையின் அபிவிருத்திக்கு ஏனைய நாடுகள் உதவுவதை இந்தியா ஆட்சேபிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் அண்மைய பயணத்தின் போதும் கடந்த ஆகஸ்ட்டில் அவரை சந்தித்த போதும் இதனை ஜெய்சங்கர் வலியுறுத்தியதாக சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அபிவிருத்திக்காக ஏனைய நாடுகள் முதலீடுகளை மேற்கொள்வதும் நிதியுதவிகளை வழங்குவதை இந்தியா ஆட்சேபிக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக சப்ரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியா, ஜப்பான் போன்று சீனாவும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு
உதவும் என்ற சப்ரி நம்பிக்கை வெளியிட்டார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 15 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
