எரிபொருள் தட்டுப்பாடு! மூதூர் பிரதேச செயலகத்தினால் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் (PHOTOS)
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் எதிர்நோக்கி வரும் போக்குவரத்து பிரச்சினையை ஓரளவு சீர் செய்யும் நோக்கத்தில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக், தலைமையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில், வலய கல்வி பணிப்பாளர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மூதூர் போக்குவரத்து சபையின் முகாமையாளர் மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவையின் நேரக்காப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலின் போது இலங்கத்துறை முகத்துவாரத்தில் இருந்து வருகின்ற பேருந்துகள் தோப்பூர் பிரதேசத்தின் ஊடாக வருவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளல், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்திற்கு பேருந்து சேவையினை ஏற்பாடு செய்தல், நோயாளர்களை பார்வையிடுவதற்காக வருகின்ற பொதுமக்களுக்கு பேருந்து சேவையினை ஒழுங்குப்படுத்தல். பேருந்து நிறுத்துமிடத்தில் ஏற்படும் இடர்பாடுகளை போக்குவரத்து பொலிஸாரின் உவியைகொண்டு சீர் செய்தல் போன்ற தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam