வடக்கு கடற்றொழிலாளர்கள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
தற்போது வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் நெருக்கடி நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடபகுதியை பொறுத்தவரை எரிபொருள் பிரச்சினை ஒரு முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது. கடந்த ஆனி மாதம் 30 ம் திகதி மண்ணெண்ணெய் வழங்கப்பட்டதற்கு பிற்பாடு எந்தவிதமான மண்ணெண்னையும் வழங்கப்படவில்லை.
டீசல் வாரத்திற்கு ஒருமுறை வழங்கபடுகின்றது. கடற்தொழில் அமைச்சரின் முயற்சியின் பயனாக மயிலிட்டி துறைமுகத்தில் வாரத்தில் மூன்று நாட்களுக்கு 2000 லீட்டர் டீசல் வழங்கப்படுகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து கடற்றொழிலாளர்களும் மண்ணெண்ணெய் இல்லாததன்
காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொதுவாக எரிபொருள் நாட்டின்
முதுகெலும்பாக இருக்கிறது.
இந்த எரிபொருள் இல்லை என்றால் இந்த நாடே முடங்க வேண்டிய நிலை காணப்படும் தற்போது நாட்டில் அனைவருக்கும் அத்தியாவசியமாக உள்ளது.
எரிபொருள் மாத்திரமே கடற்றொழிலாளர்களை பொறுத்த வரைக்கும் முக்கியமானது. டீசல், மண்ணெண்ணெய் எமக்கு தேவையாக உள்ளது.
எனவே இந்த அரசாங்கமானது உரிய மண்ணெண்னையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடக்கு கடற்றொழிலாளர்கள் தமிழ் வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam