களமுனையிலிருந்து விடுதலை புலிகளின் தலைவர் வெளியேறவில்லை! முன்னாள் போராளி தகவல் (VIDEO)
இறுதிக்கட்ட போரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் களமுனையிலிருந்து வெளியேறவில்லை என முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட போராட்டத்தின் இறுதி நாட்களில் நந்திக்கடல் பகுதியிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் களமுனையிலிருந்து வெளியேறவில்லை எனவும், தலைவரின் இருப்பு தொடர்பில் சிலர் போலியான தகவல்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் துவாரகா தொடர்பில் தற்போது பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை எனவும், யுத்த காலத்தில் வெளியிடப்பட்ட துவாரகாவின் புகைப்படம் அவரது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
துவாரகாவுடன் கல்வி பயின்ற வைத்திய மாணவியொருவரின் புகைப்படமே வெளியிடப்பட்டதாகவும், விடுதலைப்புலிகளின் தலைவர், அவரின் குடும்பங்கள் பற்றிய பின்னணி தெரியாதவர்கள் அவர்கள் தொடர்பில் தேவையற்ற சுயவிமர்சனத்தை வெளியிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam