அமைச்சர்களின் நடவடிக்கைகள் மூலம் தெரியும் நாட்டின் நிலை : முஜிபுர் ரஹ்மான்
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அமைச்சர்களின் நடவடிக்கைகள் மூலமாக இது தெரிவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடனுக்கு வாங்கும் எண்ணையை பாரமெடுப்பதற்கு அமைச்சர்கள் துறைமுகத்திற்கு செல்லும் துர்ப்பாக்கிய நிலை இந்த நாட்டில் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்ததாவது,
இந்த அரசாங்கத்தில் பெற்றோலியத்துறை மற்றும் துறைமுகத்துறை அமைச்சர்கள் இந்தியாவிலிருந்து வரக்கூடிய பெற்றோல்,டிசல் கப்பலுக்காக துறைமுகத்தில் காத்திருந்தனர்.
புதியதொரு கலாசாரத்தினை நாட்டில் உருவாக்கியுள்ளார்கள்.இவர்கள் உலகத்திற்கும் இங்குள்ள சிங்கள மக்களுக்கு இந்தியா தங்களுக்கு உதவி செய்துள்ளதாக காட்டுகின்றார்கள்.
இந்தியாவினால் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டது போன்றுதான் அவர்கள் மக்களுக்கு அதனை காட்டினார்கள். ஆனால் இந்தியா இலங்கைக்கு இரண்டு மாத கடன் அடிப்படையிலேயே அதனை வழங்கியது.
இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த அமைச்சர்களும் கப்பல் வரும் வரையில்
காத்திருந்த சரித்திரம் இல்லை.புதிய கலாசாரம் ஒன்றை இந்த அரசாங்கம்
உருவாக்கியுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
