மீண்டும் கடன் வலையில் வீழ்ந்துவிடும் அபாயத்தில் இலங்கை: பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கை மீண்டும் கடன் வலையில் வீழ்ந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் முதல் இருபத்தி இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கை அரசாங்கம் உள்ளுர் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரச் சந்தைகளில் இருந்து ஒரு இலட்சத்து பதினோராயிரத்து எழுநூற்று பதினான்கு கோடி ரூபா கடனாகப் பெற்றுள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த மாதத்தின் முதல் இருபத்தி இரண்டு நாட்களில், எண்பத்தாறாயிரத்து நூற்று நாற்பது கோடி திறைசேரி உண்டியல்களிலும், முப்பத்தொன்பதாயிரத்து எழுபத்தைந்து கோடி திறைசேரி பத்திரங்கள் ஊடாகவும் கடனாகப் பெறப்பட்டுள்ளன.

நாட்டின் கடன் சுமை
இந்த ஆண்டு, பெப்ரவரியில் அரசாங்கம் உள்ளூர் சந்தையில் எண்ணாயிரத்து எண்ணூற்று அறுபத்தைந்து கோடி ரூபாவும், மார்ச் மாதத்தில் அறுபத்து நான்காயிரத்து நூற்று நாற்பத்தி ஒன்பது கோடி ரூபாவும், மார்ச் மாதத்தில் எண்பத்தி நான்காயிரத்து முந்நூற்று இருபது கோடி ரூபாவும் கடனாகப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் உள்ளூர் சந்தையில் பெறப்பட்ட மொத்த கடன் தொகை முந்நூற்று எண்பத்து எட்டாயிரத்து அறுபத்து இரண்டு கோடி ரூபாய் என்று பேராசிரியர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நாட்டின் கடன் சுமை அதிகரித்து கடன் நெருக்கடிக்கு வழிவகுக்கும் எனவும் பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri