வருட இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 சதவீதமாக குறைக்கப்படும்: அமைச்சர் உறுதி
இந்த வருடத்தை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் மூலம் வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 சதவீதமாக குறைக்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2024 ஆம் ஆண்டில் நேர்மறையான பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் தொடங்குகிறோம். இந்த ஆண்டின் முதல் காலாண்டின் முடிவில்,மக்களின் சுமை 75% என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வரிக்கொள்கை
நடைமுறையில் உள்ள வரிக் கொள்கை எதிர்காலத்தில் அதிக நிவாரணம் பெறுவதற்கு வழிவகுக்கும் என்பதினை உறுதிப்படுத்த முடியும்.
நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடு அரசாங்கத்திற்கு ஆதரவாகும். சிலர் வரி என்று கூறி நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இருப்பினும், இலங்கையின் வரி 12%ஆகும். ஆனால் வேறு நாடுகளின் வரி சுமார் 38% முதல் 43% வரை ஆகும்.

எவ்வாறாயினும், வரி திருத்தங்களில் எந்தவொரு ஆய்வையும் நடத்தாமல் சில நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.
நுகர்வோர் விவகார ஆணையத்தின் புதிய திட்டம்
2024 ஆம் ஆண்டில், நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு ஒரு புதிய திட்டம் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்.
வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan