நாட்டின் தற்போதைய உக்கிர நிலை! நாடாளுமன்றில் புதன்,வியாழன் விவாதம்!
நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து நாளை புதன்கிழமையும் நாளை மறுநாள் வியாழக்கிழமையும் விசேட விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
இன்று நாடாளுமன்றில் சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களும் எதிர்கட்சி உறுப்பினர்களும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
இதில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் பலர் தற்போதைய நிலையில் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமைமை தாம் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டனர்.
எதிர்கட்சியினர், தமது உரை நேரத்தில், பொதுமக்களின் போராட்டத்துக்கு உரிய பதில் வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



