தமிழர் பகுதிகளில் களைகட்டும் தீபாவளி பண்டிக்கை! கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகும் மக்கள்

Diwali Sri Lankan Tamils Tamils Jaffna Kilinochchi
By Thevanthan Oct 19, 2025 03:04 PM GMT
Thevanthan

Thevanthan

in சமூகம்
Report

நாளைய தினம் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதத்தில் கிளிநொச்சி மக்களும் தங்களை தயார்படுத்திவருகின்றனர்

தீபாவளி வியாபாரம் கிளிநொச்சி நகரப் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் மக்கள் அலைகடலென திரண்டு தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை கொள்வது செய்வதை அவதானிக்க முடிந்துள்ளது.


கடந்த காலங்களில் பொருட்களுக்கான வரி அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களுக்கு தேவையான ஆடை வகைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் இடர்பாடுகள் காணப்பட்டதாகவும் இம்முறை அவ்வாறு இல்லாது சகல வழிகளிலும் பொருட்களை இறக்குமதி செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியதாக இருப்பதாகவும் குறைந்த விலையில் மக்களுக்கு பொருட்களை வழங்க கூடியதாக இருப்பதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதிகளில் களைகட்டும் தீபாவளி பண்டிக்கை! கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகும் மக்கள் | Srilanka Deepavali

தமிழர் பகுதிகளில் களைகட்டும் தீபாவளி பண்டிக்கை! கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகும் மக்கள் | Srilanka Deepavali

மேலதிக தகவல் -யது

யாழ்ப்பாணம்

 தீபாவளி  பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் பொருட்கள் ஈடுபடுவது வழமை.

அந்தவகையில் நாளையதினம் கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்காக மக்கள் இன்றையதினம் யாழ்ப்பாண நகர் பகுதியில் பல்வேறு விதமான பொருட்களை கொல்வனம் செய்வதை அவதானிக்க முடிந்தது.

தமிழர் பகுதிகளில் களைகட்டும் தீபாவளி பண்டிக்கை! கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகும் மக்கள் | Srilanka Deepavali

 புடவைகள், பட்டாசுகள், இனிப்பு பண்டங்கள், ஆபரணங்கள் போன்றவற்றை மக்கள் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது. இதனால் யாழ்ப்பாண நகரத்தில் சன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் களைகட்டும் தீபாவளி பண்டிக்கை! கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகும் மக்கள் | Srilanka Deepavali

தமிழர் பகுதிகளில் களைகட்டும் தீபாவளி பண்டிக்கை! கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகும் மக்கள் | Srilanka Deepavali

மேலதிக தகவல்- கஜிந்தன் 

வவுனியா

தீபாவளி திருநாளை முன்னிட்டு வவுனியாவில் வியாபாரம் களை கட்டியுள்ளதுடன், நகரில் அதிக சனநெரிசல்களையும் அவதானிக்க முடிகிறது.

தமிழர் பகுதிகளில் களைகட்டும் தீபாவளி பண்டிக்கை! கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகும் மக்கள் | Srilanka Deepavali

நாளையதினம் உலகம் பூராவும் உள்ள இந்து மக்களினால் தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை கொணடாடும் முகமாக வவுனியா நகரிற்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்து புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு பண்டங்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.

கடந்த வருடத்தை விட இம் முறை தீபாவளி வியாபாரம் களை கட்டியுள்ளதுடன், மக்கள் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஆர்வத்துடன் தயாராகி வருவதையும் அவதானிக்க முடிந்தது.

தமிழர் பகுதிகளில் களைகட்டும் தீபாவளி பண்டிக்கை! கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகும் மக்கள் | Srilanka Deepavali

மேலதிக தகவல்- திலீபன்

வடமராட்சி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வடமராட்சி பகுதிகளில் இம்முறை தீபவளி சந்தை சோகையிழந்துள்ளது.

வழமையான தீபாவளி மற்றும் பண்டிகை தினங்களுக்கு முதல்நாள் நகர்களில் பல்வேறு பகுதிகளிலும் அதிகளவான மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுவது வழமை.

ஆனால் இன்று பருத்தித்துறை, மந்திகை, நெல்லியடி நகரங்கள் சோகையிழந்துள்ளனர்.

தமிழர் பகுதிகளில் களைகட்டும் தீபாவளி பண்டிக்கை! கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகும் மக்கள் | Srilanka Deepavali

இதேவேளை பருத்தித்துறையிலிருந்து மருதங்கேணி கட்டைக்காடு கேவில் ஊடக போக்குவரத்தில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை காலை 11:30 மணிக்கு பின்னர் தமது சேவையை நிறுத்தியுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பருத்தித்துறை மருதங்கேணி கட்டைக்காடு ஊடாக கேவில் வரை சேவையில் ஈடுபடும் தனியார்‌ பேருந்து சேவைகளும் நீண்டகாலமாக பருத்தித்துறை மருதங்கேணி கட்டைக்காடு ஊடாக 12:30 மணியுடன் சேவையை நிறுத்தியுள்ளனர்.

ஆனால் இலங்கை போக்குவரத்து சபை வருமானம் அதிகமான பருத்தித்துறை யாழ்ப்பாணம் பேருந்து சேவையை மட்டும் ஒழுங்கு மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த போக்குவரத்து சேவைகளில் காணப்படு குறைபாடுகள் தொடர்பாக பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜீவனிடம் முறையிட்டுருந்தபோது பருத்தித்துறை கேவில் பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 வழித்தடங்களை சீரமைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தும் இதுவரை பருத்தித்துறை சாலை முகாமை எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மலையகம்

மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்த வந்த நரகாசுரனை அழித்து இருள் நிறைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய திருநாளான தீபாவளி பெருநாளினை கொண்டாடுவதற்காக மலையகத்தில் வாழும் மக்கள் நாளை மலர உள்ள தீபத்திருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

இதனையொட்டி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கொட்டும் மழையினையும் பொருப்படுத்தாது நகரங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மலையக நகரங்களில் கூடியிருந்தனர்.

ஹட்டன் நகரில் இன்று காலை முதல் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வருகை தந்திருந்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெசல் ஏற்பட்டன. போக்குவரத்து நெரிசலினை கட்டுப்படுத்தவதற்காக பெரும் எண்ணிக்கையிலா பொலிஸார் நகரில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

தமிழர் பகுதிகளில் களைகட்டும் தீபாவளி பண்டிக்கை! கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகும் மக்கள் | Srilanka Deepavali

பெரும்பாலான மக்கள் சமயத்திற்கு முக்கியத்துவமளித்து புத்தாடைகளையும் பூஜை பொருட்களையும் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கும் அதிகமான மக்கள் வருகை தந்திருந்தனர்.

எது எவ்வாறான போதிலும் இலங்கையில் பல நெடுங்காலமாக மாறி மாறி வந்த அரசாங்கங்களால் மலையக மக்களின் வாழ்வில் பிரகாசமான தீபா ஒளி வீசவில்லை என்றுதான் கூற வேண்டும் அவர்களின் இன்னல்கள் அவ்வாறே காணப்பட்டு வந்த நிலையில் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் மக்களின் வாழ்வில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இம்முறை தீபத்திருநாளினை கொண்டாட உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.








GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, வவுனியா, வள்ளிபுனம்

18 Oct, 2022
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Scarborough, Canada

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், London, United Kingdom

13 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US