இலங்கையில் செயற்படும் ஆபத்தானவர்கள் - வெளிநாடுகளிலிருந்து செயற்படும் தலைவர்கள்
மேல் மாகாணத்தில் செயற்படும் 24 பாதாள உலகக் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அவர்களில் தலைவர்களாக செயற்படும் 12 பேர் தற்போது டுபாயில் வாழ்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
300 பேர் அடையாளம்

அந்த 24 கும்பல்களில் 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களை கைது செய்வதற்கான அனைத்து தகவல்களும் ஏற்கனவே அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்ய நடவடிக்கை

அவர்களை கைது செய்வதற்கு மேல்மாகாணத்தில் 24 மணி நேரமும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தப்பியோடிய நபர்களை டுபாயில் இருந்து நாட்டிற்கு அழைத்து வருவது இராஜதந்திர ரீதியாகவும் சர்வதேச பொலிஸாரின் ஆதரவுடனும் நடைமுறைப்படுத்தப்படும் என தேஷபந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan