இலங்கையில் செயற்படும் ஆபத்தானவர்கள் - வெளிநாடுகளிலிருந்து செயற்படும் தலைவர்கள்
மேல் மாகாணத்தில் செயற்படும் 24 பாதாள உலகக் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அவர்களில் தலைவர்களாக செயற்படும் 12 பேர் தற்போது டுபாயில் வாழ்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
300 பேர் அடையாளம்
அந்த 24 கும்பல்களில் 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களை கைது செய்வதற்கான அனைத்து தகவல்களும் ஏற்கனவே அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்ய நடவடிக்கை
அவர்களை கைது செய்வதற்கு மேல்மாகாணத்தில் 24 மணி நேரமும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தப்பியோடிய நபர்களை டுபாயில் இருந்து நாட்டிற்கு அழைத்து வருவது இராஜதந்திர ரீதியாகவும் சர்வதேச பொலிஸாரின் ஆதரவுடனும் நடைமுறைப்படுத்தப்படும் என தேஷபந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
