பாணின் விலையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை
முட்டை தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வு ஆகிய பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்துக்குள் தீர்வு காணாவிட்டால், பாண் உட்பட பேக்கரி உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தாவது முட்டைகளை இறக்குமதி செய்து, நிவாரண விலைக்கு விநியோகிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

அதிக விலைகளுக்கு முட்டை கொள்வனவு
உற்பத்தி செய்யப்படும் முட்டைகளும் 70 ரூபாவை அண்மித்துள்ளது. அதிக விலைக்கும் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை பேக்கரி தொழிற்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
முட்டை தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வு ஆகிய பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்துக்குள் தீர்வு காணாவிட்டால், பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலையை மீண்டும் அதிகரிக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri