உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சி பெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 50 பேரையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரானின் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும்,இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்த சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 69 பேரை கைது செய்யப்பட்டிருந்தனர்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்ட நிலையில், இவர்கள் அனைவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவற்றில் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர்,ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 5 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதுடன், 16 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து 50 பேர் தொடர்ந்தும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, பதுளை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது
எரிபொருள் பிரச்சினை காரணமாக நீதிமன்றிற்கு அழைத்து வரமுடியாததையிட்டு
நீதவான் கணொளி மூலம் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிட்டுள்ளார்.