இந்தியாவினால் திறக்கப்படவுள்ள இலங்கைக்கான புதிய கதவுகள்: சிறீதரன் நம்பிக்கை
அமையப் போகின்ற இந்தியாவின் புதிய அரசாங்கமானது இலங்கைக்கான புதிய கதவுகளை திறந்து விடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட போட்டி ஒன்றில் பங்குபற்றிய அவர், போட்டியின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“அண்மையில் நடைபெறவுள்ள இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில், வரப் போகின்ற அரசாங்கம் இலங்கை தொடர்பான முக்கிய விடயங்களை கையாள கூடியதாகவே இருக்கும்.
முக்கிய பங்குகள்
அத்துடன், அமையப் போகின்ற இந்தியாவின் புதிய அரசாங்கமானது இலங்கை தொடர்பில் முக்கிய பங்குகளை வகிக்கும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |