பூநகரி, மக்களைச் சந்தித்த சிறீதரன் எம்.பி
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர், சாமிப்புலம் மற்றும் ஆலங்கேணி கிராம மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
நல்லூர் வட்டார உறுப்பினரும் பூநகரி பிரதேச சபையின் துணைத் தவிசாளருமாகிய குணலக்சுமி குலவீரசிங்கம், தமிழரசுக் கட்சியின் நல்லூர் வட்டார அமைப்பாளர் ஐயம்பிள்ளை லோகநாதன் ஆகியோரோடு சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் நல்லூர் வட்டார மக்களின் தேவைகள், குறைபாடுகள் என்பவை தொடர்பில் ஆராயப்பட்டது.
மிக முக்கியமாக, நல்லூர் கிராம அலுவலர் பிரிவை நல்லூர், முக்கொம்பன் என்ற தனித்தனி கிராம அலுவலர் பிரிவுகளாக்குதல், கிராமிய ஆலயங்களுக்கான மின்சார வசதியை ஏற்படுத்தல், வீட்டுத்திட்டம், வேலைவாய்ப்பு, நலன்புரி உதவுதொகை வழங்கலில் உள்ள குறைபாடுகள், பொதுப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து மக்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
குடிநீர் விநியோகம்
அதேவேளை, சாமிப்புலம் கிராமத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பிலும், உவர் நீர் தடுப்பு அணைக்கட்டை மீளமைத்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் முக்கொம்பன் பிரதான வீதி, பெரும்படைப் பிள்ளையார் - சீதா குடியிருப்பு வீதி, ஆவரஞ்சாட்டி கடற்கரை வீதி, தியாகம் - மேளாய் அம்மன் வீதி, சாமிப்புலம் விறுமர் ஆலய வீதி, அன்னதேவன் விவசாய வீதி உள்ளிட்ட கிராமிய வீதிகளின் புனரமைப்புத் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இவற்றுள் சாமிப்புலம் குடிநீர் விநியோகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மக்களின் ஏனைய கோரிக்கைகள் தொடர்பிலும் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? Manithan

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam
