கோழி பிரியாணி பார்சலுடன் வீ்ட்டிற்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
வாத்துவ - பொடுபிட்டிய பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட கோழிக்கறியுடன் கூடிய ரைஸ் பார்சலில் சாப்பிட்டு அகற்றப்பட்ட கோழி எலும்புகள் இருப்பதாக நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாத்துவ பொடுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முறைப்பாட்டாளர் தனது மகளின் வேண்டுகோளுக்கு இணங்க, களுத்துறை நகரின் மையப்பகுதியில் உள்ள பிரதான உணவகம் ஒன்றில் நேற்றிரவு 950 ரூபாவிற்கு கோழியுடன் கூடிய ரைஸ் பார்சலை 950 ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
குறித்த பார்சலை வீட்டிற்கு சென்று திறந்து பார்த்த போது சாப்பிட்டு அகற்றப்பட்ட கோழி எலும்புகள் காணப்பட்டமையினால் அன்றிரவே உணவக நிர்வாகத்திடம் காண்பித்ததாகவும் அவர்கள் மற்றொரு பார்சலை வழங்க சம்மதித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் பிரதம பொலிஸ் பரிசோதகர் தென்னகோன் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri
