நாட்டைவிட்டு வெளியேறியுள்ள பெருந்தொகை இலங்கையர்கள்
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 2,565,365 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதன்படி, 2022ல் 1,127,758 பேரும், 2023ல் 1,437,607 பேரும் வெளிநாடு சென்றுள்ளனர்.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டு மாத்திரம் வெளிநாட்டு ஊழியர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அந்நியச் செலாவணியின் அளவு 3,789 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி
அதில் பெரும்பாலானவை குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி 139.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |