வெளிநாட்டில் மனைவி: மகளை துன்புறுத்தி காணொளி வெளியிட்ட தந்தை கைது
வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை மீண்டும் நாட்டிற்கு வருமாறு தனது பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்ட தந்தையை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பலாங்கொடை - பெட்டிகல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய தந்தையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தனது மகளைக் கவனிக்கும் பொறுப்பை, கணவன் மற்றும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு தாய் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், மனைவியை மீண்டும் நாட்டிற்கு வருமாறு அழைத்து தனது பெண் குழந்தையை துன்புறுத்தி காணொளி வெளியிட்டுள்ளார்.
விளக்கமறியல் உத்தரவு
தற்போது பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை குணமடைந்த பின்னர் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், தாயார் வரும் வரை சிறுமி காப்பகத்தில் வைக்கப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
