தமிழக எல்லைக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ள இலங்கையர்கள்! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
ஒரு தொகுதி இலங்கையர்கள் படகு மூலம் இந்தியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மீன்பிடிப் படகுகள் மூலம் ஒரு தொகுதி இலங்கையர்கள் இவ்வாறு தமிழக எல்லைக்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இலங்கையர்கள் தரைவழியாக கேரளாவை சென்றடைய முயற்சிப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
படகு மூலம் வெளிநாடு செல்வதற்காக இவ்வாறு அவர்கள் கேரளாவிற்குள் பிரவேசிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக எல்லைப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.