அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்த விசேட நடவடிக்கை
அரச வைத்தியசாலைகளில் (Government Hospitals) பணி நேரத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான, ஊக்கத்தொகையை வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை நேற்று (28) முதல் தடவையாக கூடிய போது இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியல்
ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகளை மக்களுக்கு வினைத்திறனாக வழங்குவதற்கான திட்டங்களை தயாரித்தல், தற்போதுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், அரச மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் அதிகளவானோர் காத்திருப்பது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி நிதியச் செயலாளர் ரொஷான் கமகே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam