இஸ்ரேலில் மோசமடையும் பாதுகாப்பு நிலைமை : இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்
தெற்கு லெபனான் மற்றும் ஈரானைத் தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பின் தொடர்ச்சியான தாக்குதல்களால், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலில் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
சமீப வாரங்களில் இதுவே மிகவும் தீவிரமான தொடர் தாக்குதல்கள் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.
கெய்ரோ விமான நிலையம்
இதற்கிடையில், கடந்த சில நாட்களில் திமோனா பகுதியில் ஏவுகணைத் தாக்குதல்களால் வீடுகள் சேதமடைந்த 12 இலங்கையர்களுக்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் குறுகிய கால ஹோட்டல் தங்குமிடத்தை வழங்கியுள்ளன.

மேலும், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்பவர்கள், இஸ்ரேலுக்கும் எகிப்திற்கும் இடையேயான தபா எல்லைக் கடப்பு வழியாக கெய்ரோ விமான நிலையத்திற்குப் பயணிக்கலாம் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை 21 இலங்கையர்கள் இந்த எல்லை வழியாக இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் மேலும் 14 இலங்கையர்கள் மார்ச் 31 அன்று இந்த எல்லை வழியாக இலங்கைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri