வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
தென் கொரியாவில் வேலைவாய்ப்பு
இதன்படி, இந்த வருட இறுதிக்குள் கிட்டத்தட்ட 5000 இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் வேலை வாய்ப்பு கிடைக்குமென பணியகம் தெரிவித்துள்ளது.
சுமார் 3,000 இலங்கை தொழிலாளர்கள் கொரியாவிற்கு வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 200,000 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.