சீன வங்கிக்கு பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கையர்கள் (VIDEO)
கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் எடுப்பதற்கும் காணொளிகளை பதிவு செய்வதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதற்கமைய தனியார் மற்றும் வணிக ரீதியிலான இரு பிரிவுகளின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அந்தப் பணத்தை சீன வங்கிக்கு செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பார்வைக்கா கடந்த 10ஆம் திகதி திறக்கப்பட கொழும்பு துறைமுக நகருக்குள் தனிப்பட்ட மற்றும் வர்த்தக ரீதியிலான படப்பிடிப்புக்களை நடத்துவது குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.
இந்த அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது விசேட செய்திகளின் தொகுப்பு,